சும்மா இல்லை… US$ 612 million.
சொந்தமாக தொலைக்காட்சி சானல் இல்லாதவர்கள் கூட ஏலம் கேட்கலாமோ? முன்னமேயே தெரிஞ்சிருந்தால், நானும் bid செஞ்சிருப்பேன்
சும்மா இல்லை… US$ 612 million.
சொந்தமாக தொலைக்காட்சி சானல் இல்லாதவர்கள் கூட ஏலம் கேட்கலாமோ? முன்னமேயே தெரிஞ்சிருந்தால், நானும் bid செஞ்சிருப்பேன்
“…………1950களில் வெளிவந்த All about Eve. பெட்டி டேவிஸ், ஆன்னே பாக்ஸ்டர் நடித்தது. ஹாலிவுட் என்னும் மாய விளக்கில் தினந்தோரும் விழும் விட்டில் பூச்சிகளில் ஒருத்தி ஆன்னே பாக்ஸ்டர். பெட்டி டேவிஸின் தீவிர ரசிகை. மெல்ல மெல்ல அந்நடிகையை நெருங்கி, அவளின் நம்பிக்கைக்குறியவளாய் மாறி, பிறகு சமயம் கூடும்போது அவளின் இடத்தை பிடிக்கிறாள். வஞ்சிப்பது பெண் என்பதாலேயே இத்துரோகத்தின் தீவிரம் கூடிவிட்டதாய் தோன்றியது. இப்போது ஆன்னே பாக்ஸ்டர் முன்னனி நடிகையாய் திகழ, அவளை காண வருகிறாள் ஓர் இளம் ரசிகை. அந்த ரசிகையின் முதல் துரோக கணத்துடன் முடிகிறது படம்……”
பெரியார் குறித்த கேள்வி ஒன்று பதிலளிக்கையில், நவீன இலக்கியவாதிகளில் ஒருவரான இருவரான ப்ரேம்-ரமேஷ்,
“………பெரியார் தமிழரல்ல. தமிழகத்திலுள்ள யாதொரு சாதியையும் சேர்ந்தவருமல்ல. அவருடைய குரல் வந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒலித்ததே இல்லை. இந்தவிதத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இவருக்கு உதாரணமாகச் சொல்ல வேறு ஆள் இல்லை.
பெரியார் பேசியது ஒட்டுமொத்தத் தமிழருக்கு ஒட்டுமொத்தத் திராவிடருக்கு. அவர் தலித்துகளுக்கு எதிரானவராகவும் பெண்களுக்கு எதிரானவராகவும் ஒரு சிலரால் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அபத்தமானவை. இதை பெண்களே எதிர்க்கிறார்கள். சமீபத்தில் கவிஞர் மாலதிமைத்ரி தனது ‘விடுதலையை எழுதுதல்’ கட்டுரைத் தொகுப்பை பெரியாருக்குச் சமர்ப்பித்திருக்கிறார்…….”
மேலே வாசிக்க ( டிஜே தமிழன் வழியாக )
“…….வாதம் முற்றிப் போக என் ஆசிரியர் என் ஆய்வக ஏடைத் தூக்கி என் மூஞ்சியில் வீசியடித்தார். என்னை வகுப்பை விட்டு வெளியே துரத்திவிட்டார். அதிலிருந்து எனக்கு அவருக்கும் நிரந்தரப் பகை. அடுத்த ஐந்து வருடங்கள் நாங்கள் இருவரும் அக்னிநட்சத்திரம் கணக்காக மோதாத குறைதான். அவருக்கு நான் அளித்த ‘சிங்கப்பூர் சித்தாள்’ என்ற பட்டம் மாணவர்களிடையே நிரந்தப்பட்டுப் போனது…..”