சிங்கப்பூரில் முஸ்தபாவின் வாசலில்தான் சுதந்திரமாகப் புகைக்க முடிகிறது. ஒரு டீ, ஒரு புகை, டீக்கடை பெஞ்சு என்னதான் வெளிநாடு சென்றாலும் எனது வழக்கம் மாறுமா? இரவு பன்னிரண்டு மணிக்கு முஸ்தபாவின் வாசலில் டீயை உறிஞ்சிக்கொண்டே லிட்டில் இண்டியாவின் சாலையில் இருக்கும் ஏகப்பட்ட இந்தியக் கடைகளின் பெயர்ப் பலகைகளைப் படித்துக்கொண்டே நேரம் போனது தெரியவில்லை.
ஆசாத்தின் முத்திரை நகைச்சுவையுடன் சிங்கப்பூர் பயணக்குறிப்புகள்.