ஆர்க்கிடெக்சர்லே இத்தனை விஷயம் இருக்கா? அடேங்கப்பா…
மீஸ் வாண்டர் றொ (1886 - 1969) செருமனி, ஆச்சேனில் (Aachen) பிறந்தவர். கட்டுமானப் பணியில் தேர்ந்தவராக இருந்த அவரது தந்தையோடு பத்தொன்பது வயது வரையிலும், பின்னர் பெர்லினில் இருந்த கைதேர்ந்த கட்டிடக்கலை நிபுணராக இருந்த பீட்டர் பெஹ்ரன்ஸ் (Peter Beherens) அவர்களின் கட்டிடக்கலைக் கூடத்தில் நான்காண்டுகள்(1908 - 1912) பணி புரிந்தார்.அங்கே அவர் ப்ருஷ்ய (prussia) கட்டிடக்கலையின்பாலும்,புதிய மேம்பட்ட கட்டிடவடிவமைப்பின்பாலும் கொண்ட ஆர்வத்தினால் பெர்லினிலேயே தனக்கென்று ஒரு சிறிய கட்டிடக்கலைக் கூடத்தை அதே ஆண்டில்(1912) தொடங்கினார். பின்னர் ப்ருஷ்ய(prussian) கட்டிடக்கலை நிவுனரான கார்ல் ஃப்ரீட்ரிச் ஷின்க்கெல் அவர்களின் வடிவமைப்பின் மீது ஊக்கம் கொண்டு, அதை தன்னுடைய இரும்பு மற்றும் கண்ணாடிகளால் கூடிய வடிவமைப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். பெரும்பாலான இவரது கட்டிட வடிவமைப்புகளில் இரும்பும், கண்ணாடியும் பிரதானமாக இருந்தது.