Web 2.0 ஒழிக…
அய்யோ, நான் சொல்லலை… Robet May சொல்றார்..
"….I get a little aggravated when somebody launches yet another social networking site or whatever other Web2.0 idea they have that has no way of making money yet gets $5million in VC funding primarily from the hope that Google will buy them someday.
Many of these sites don't create any value the way most new companies do. They siphon off attention and make people less focused. Many of these sites aren't making people more productive, they are making people waste more time. Their value is that they entertain. How do I know that? Because I was caught up in it. I was on these sites multiple times a day for months, afraid I would miss something cool. Only when I realized how shallow my thinking had become and how much I had lost my ability to focus deeply did I begin to cut back and ignore them. I don't need to be in touch with everyone, all the time. I don't need to see what they are posting and saying and tagging and podcasting. I need to better myself, not entertain myself….."
முழுதும் வாசிக்க…
இவர் சொல்றது நிஜமா? யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்களேம்ப்பா..
Scott Adams தெரியுமில்லையா? அதாங்க, Dilbert கார்ட்டூன் போடுவாரே, அவர் தன்னோட வலைப்பதிவிலே, Pleasure Unit Theory என்றால் என்ன என்று விளக்குகிறார்
My theory explains all the following:
- Why poor people are fatter than rich people.
- Why people with crappy lives do drugs that are sure to be destructive in the long run.
- Why you are reading this blog instead of working
அவசியம் தெரிஞ்சுக்கணும்னா , நீங்களே போய் பார்த்துக்கங்க..
விமர்சகர்கள் கிருஷ்ண, குப்த நாயர்கள், மலையாள இசையமைப்பாளர் தேவராஜன் ( திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே.. நினைவிருக்கிறதா? ), அற்புதமான நடிகர் எம்.எஸ்.திருப்பூணித்துறா போன்றோரின் மரணத்துக்கான இரங்கல் குறிப்புகள், எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டரில் பார்த்த நாடகத்தின் விமர்சனம் ஆகியவற்றுடன் இரா.முருகனின் நெடுங்குறிப்பு..
கதேயின் நாடக நாயகன் டாக்டர் பாஸ்ட் வானளாவிய அதிகாரம் கிடைக்க ஏங்குகிறான். உலகத்தின் சகலமான இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். கேட்டதைத் தருகிறேன் என்று முன்வருகிறான் மெபிஸ்டபிலிஸ் என்ற பெயரில் வரும் சாத்தான். ஒரே ஒரு நிபந்தனை. பாஸ்ட் சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தரவேண்டும். எந்த ஒரு இன்பத்தை அனுபவிக்கும்போது அதில் அமிழ்ந்து வெளியேறி அடுத்த இன்ப அனுபவத்துக்கு வர முடியாமல் போகிறதோ, அப்போது பாஸ்ட் சாத்தானுக்கு அடிமையாகி விடுவான். ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தரும் பாஸ்ட்டும், அவன் கூடவே மெபிஸ்டபிலிஸும் போகிற வெளி, உள் பயணங்களின் ஒழுங்கமைவு ஜாக்கிரதையாகக் குலைக்கப்பட்ட தொகுப்பு தான் ‘பாஸ்ட்’ நாடகம்.
Welcome Back Era.mu
மெட்ராஸ் பாஷையின் மகத்துவம் குறித்து, கிருத்திகா..
படா சோக்காதான் கீது…
[Tip : Kaps]
விஜயகாந்தின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், அவருடன் சென்ற பத்திரிக்கையாளர் சுதீஷ் காமத்தின் புகைப்படத் தொகுப்பு
[Tip : Kaps]
வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் போது, எப்படியாவது இந்தியாவுக்கு திரும்பி விட வேண்டும் என்று நினைத்து, அந்த எண்ணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருபவரா நீங்கள்? இரு வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் இருந்து மூட்டை முடிச்சுக்களுடன் இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆன, ராம் விஸ்வநாதன், தன் அனுபவங்களைச் சொல்கிறார். சில டிப்ஸ¤களும் கொடுக்கிறார்.
Dilemma | Decision | Planning
மூடி திறந்ததும் சுழன்று வருகின்றன
ஈற்றைக் குத்த நாவைச் சுழற்றும்
பற்குத்துக் குச்சிகள்
கனவுலக பீரங்கிகள் போல் இடுக்குகளில்
நுழைந்து நுழைந்து வெடிக்கின்றன குத்திச் சேகரிக்கின்றன
எதிரில் தட்டில் துடைத்தெறிந்து மூடிய தாளுக்கடியில்
இரண்டு கடின ரொட்டிகளுக்கிடையில் நறுக்கிய
தக்காளிகளுக்கிடையில்
கடிபட்ட நகரத்தின் மிச்சங்கள்
முழுக்கவிதையும் இங்கே…
இந்தக் கவிதையில் இருக்கும் படிமம் தென்படுகிறதா?
நாம் அணியும் உடைகளும், அவை ஏற்படுத்தும் பாதிப்பையும் பற்றி சுதாகரின் அனுபவப் பகிர்வு
அகிரோ குரோசோவா வின் இகுரு (Ikuru) வையும் , சத்யஜித்§ரயின் 'பதேர் பஞ்சலி' யையும் ஒரே தட்டில் வைத்து அலசுகிறார் சந்திரசேகரன் கிருஷ்ணன். கலக்கறீங்கோ கிருஷ்ணன்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, பிள்ளைப் பெறுதல் என்கிற விஷயம் நடந்து கொண்டிருந்தாலும், நமக்குன்னு வரும் போது, அதிலே இருக்கும் சந்தோஷம் அலாதியானது. ரொம்ப நாளாகக் க¡ணோம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர், திடீரென்று வந்து ‘ அம்மாவாகப் போகிறேன்’ என்கிறார்.
வாழ்த்துக்கள்
கோவை GCT கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனுக்கு 'என்றென்றும் அன்புடன்' பாலா எழுதும் ஆத்மார்த்தமான கடிதம்.
எச்சரிக்கை : கடிதம் கொஞ்சம் pathos effect இல் இருக்கும்.
முடிவெட்டும் கடைக்குப் போனால், சமயத்தில் நடக்கிற கூத்துக்களை, அங்கே போனால் தான் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். அர்விந்த் ஷர்மாவுக்கு ஏற்பட்ட அனுபவம் இங்கே
மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆங்கில எழுத்தாளர் ரோஹின்டன் மிஸ்திரியை குறித்த, சுமதி ரூபனின் பதிவு.
… என்று சொல்வதற்கு, புள்ளைங்களுக்கு என்ன மாதிரியாவெல்லாம் ஐடியா வருது பாருங்க.. [ எல்லாம் சரி, பார்ட்டி கிட்ட உங்க வலைப்பதிவு முகவரியை தப்பித் தவறி கூட குடுத்துடாதீங்க
]