Gaanaa..Azad
வாள மீனுக்கு வெலாங்கு மீனுக்கு கல்யாணம்.. இந்தப் பாட்டை ஒருதரமாவது கேட்டிருப்பீர்கள். இது நிஜமாகவே கானா என்கிற இலக்கணத்துக்குள் அடங்குகிறதா? கானா கவிஞர் ஆசாத், பிரித்து மேய்கிறார் இங்கே ( உப செய்தி :இவர் கானா பற்றிய நூல் ஒன்றை எழுதியவர்)
மாப்பிள்ள வாளமீனு பழவேற்காடு தானுங்கோ(வ்)! - அந்த
மணப்பொண்ணு வெலாங்குமீனு மீஞ்சூரு தானுங்கோ(வ்)!'வரிகளில் உலகநாதன் சென்னைத் தமிழின் கானா மொழியை அட்டகாசமாகக் கையாண்டிருக்கிறார்.நாட்டியம், வாத்தியம் என்று இயைபுத்தொடையாக கானாவின் இலக்கணம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதான நாட்டியம்! - அய்ய
மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்!கானாக்களில் மரபாக எழுதப்படும் இன்னொரு உத்தி, 'டா' சேர்த்துக்கொள்வது.