எல்லோர் வாழ்க்கையிலும் இப்படிப் பட்ட கதை ஒன்று இருந்தே ஆகும் போலிருக்கிறது. ஒரு விக்ரமன் படத்துக்கான கதையை ஒரு பக்கத்தில், கொங்குத் தமிழில் அழகாக எழுதியிருக்கிறார்..[ 'நீ இதைச் செய்யலாமான்னு?" சட்டையைப் பிடிச்சு உலுக்கினப்பவே உறைச்சிருக்கணுமே ராசா.. மிஸ் பண்ணிட்டீரே
]
அருமை…
தமிழ் இணையத்துக்கு வந்தது எப்படி என்பது முதற் கொண்டு தற்போதைய வலைப்பதிவு வாழ்க்கை வரை, சுருக்கமாக, அழகாக விளக்கும் ஆசீப் மீரானின் இடுகை. ['நினைவு நதியில் ஒரு பயணம்' கவிதத்தனமா தலைப்பு வெக்கற அளவுக்கு ஸ்கோப் இருக்கிற மேட்டரை வேஸ்ட் பண்ணிட்டீங்களே அண்ணாச்சீ ]
….என்றால் என்ன தெரியுமா? நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்கும் இடைப்பட காலம். மீனாக்ஸ் மாதிரி ரொமாண்டிக்கான ஆளை பார்ப்பது சிரமம். வருங்கால மனைவியைச் சந்திக்கப் போய் வந்தவர் காதிலே, ' மாங்குயிலே பூங்குயிலே' பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறதாம்.
இருக்கும்வே
பின்னால பார்க்கத்தானே போறோம், வேற என்னல்லாம் பாட்டு கேக்கப்போவுதுன்னு..
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, பிள்ளைப் பெறுதல் என்கிற விஷயம் நடந்து கொண்டிருந்தாலும், நமக்குன்னு வரும் போது, அதிலே இருக்கும் சந்தோஷம் அலாதியானது. ரொம்ப நாளாகக் க¡ணோம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர், திடீரென்று வந்து ‘ அம்மாவாகப் போகிறேன்’ என்கிறார்.
வாழ்த்துக்கள்
கோவை GCT கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனுக்கு 'என்றென்றும் அன்புடன்' பாலா எழுதும் ஆத்மார்த்தமான கடிதம்.
எச்சரிக்கை : கடிதம் கொஞ்சம் pathos effect இல் இருக்கும்.