மூடி திறந்ததும் சுழன்று வருகின்றன
ஈற்றைக் குத்த நாவைச் சுழற்றும்
பற்குத்துக் குச்சிகள்
கனவுலக பீரங்கிகள் போல் இடுக்குகளில்
நுழைந்து நுழைந்து வெடிக்கின்றன குத்திச் சேகரிக்கின்றன
எதிரில் தட்டில் துடைத்தெறிந்து மூடிய தாளுக்கடியில்
இரண்டு கடின ரொட்டிகளுக்கிடையில் நறுக்கிய
தக்காளிகளுக்கிடையில்
கடிபட்ட நகரத்தின் மிச்சங்கள்
முழுக்கவிதையும் இங்கே…
இந்தக் கவிதையில் இருக்கும் படிமம் தென்படுகிறதா?
எல்லா பிசிக்ஸ் வாத்தியார்களும்
'மரை' கழண்ட மாதிரி தான் பேசறாங்க
முந்தின ராத்திரி பருப்பு ஊற வெச்சு
பக்குவமா அரைச்சு பசி நேரத்துக்கு சுட்டுக்கொடுத்தாலும்,
அம்மா, அலமேலு மாமி அன்னிக்கு குடுத்து
விட்ட பருப்புக் கொழுக்கட்டை மாதிரி
இது இல்லியே ஏன்?
ரெண்டரை பாட்டில் 'லாகர்' க்கு மேலே
அரை அவுன்ஸ் அதிகமாப் போனாலும்
அன்னிக்கி ராத்திரி 'ஆ·ப்பாயில்' நிச்சயம்.
எல்லா 'அம்மிணீஸ்க்கும்' வயசு பத்தி
கேள்வி கேட்டா சர்வ நிச்சயமாக் கோவம் வரும்
குட்டிப் பொண்ணே, இந்தா பிடி சாபம்..
ஆடிப் பாடி, விளையாடி,
கை கோர்த்து நடந்து, முத்தமிட்டு,
முத்தாய் சிரித்து, சிறு பூவாய் மலர்ந்து,
பூரித்து இருக்கயில் ஒரு நாள்..
மனம் குமுற, கண்ணீர் பெறுக,
முதல் முறையாய் தனிமை அதனை
உணர்ந்து நின்றேன், என்
உயிர் சினேகிதி அவளது மரணத்தில்..
இதை கவிதைன்னு சொல்ல முடியுமான்னு தெரியலை… இருந்தாலும் நல்லா இருக்கு…
ஒரு படைப்பியல்வாலியின் இழக்கிய அனுபவங்கள்.
நான் கதை எழுதும் முயற்சியை கைவிட்டதற்கு இந்தக் கதையும் ஒரு காரணம். வாசிக்கும் போது மூச்சு முட்டி ‘பக்கெட்டை உதைப்பதற்கான’ வாய்ப்புகள் அதிகம். நிதானமாக வாசிக்கவும்.
[ஏப்ரல் 2000 இலே எழுதப்பெற்று, ஜனவரி 2005 இலே மீள் பிரசுரம் ஆனது.]