Greater Fool Theory - Anand Sridharan
சென்செக்ஸ், அபாயகரமாக ஏறிக்கொண்டும் இறங்கிக் கொண்டும் இருப்பது குறித்தும், அனலிஸ்ட்டுகளின் அபத்தமான முடிவுகள் பற்றியும் ஆனந்த் ஸ்ரீதரன்…
சென்செக்ஸ், அபாயகரமாக ஏறிக்கொண்டும் இறங்கிக் கொண்டும் இருப்பது குறித்தும், அனலிஸ்ட்டுகளின் அபத்தமான முடிவுகள் பற்றியும் ஆனந்த் ஸ்ரீதரன்…
Capital Account Convertibility க்கு இந்தியா தயாரா?
இல்லை இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும் என்கிறார் பத்ரி
நீங்க The Economic Times வாசிக்கறவரா? அப்படின்னா, உங்களுக்கு என்.எஸ்.ராம்நாத்தை நிச்சயம் தெரிஞ்சிருக்கும். துணி வாங்கப் போய், ஒரு பொலம்பல்ஸ் கவிதை கொண்டாந்திருக்கார்..
பத்து வாரம் பாடு பட்டு
பணம் காசு சேத்து வெச்சு
பஸ் எடுத்து பட்டணம் போய்
வீட்டாண்ட வந்து பாத்தா
கோவணம் போல இருக்குதே
சரி, இதுக்கும் warren buffet சொன்னதுக்கும் என்ன சம்மந்தம்? போய்த்தான் பாருங்களேன்…
நவீனமயமாகிவரும் சிறப்பங்காடிகளில் நடக்கும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் குறித்த சிறப்பான கட்டுரை.
அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக மத்திய-அமெரிக்க நாடுகளில் இருந்தும், மெக்ஸிகோவில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் ஊடுருவுகிறார்கள். சல்லிசான ரேட்டில் வேலைக்கு ஆள் அமர்த்த இந்த illegal immigration உதவுவது போல், மும்ம்பையில் ‘சேரி’களும் பாதுகாக்கப்படுகின்றன?
இவற்றின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடியூடு. தாராவி போன்ற இடங்களில் பெரும்பணம் புரளும் மனிதர்கள் சேரிகளில் வாழ்ந்து ஆதிக்கம் செய்து வருகின்றனர். சேரிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகள் அவர்களை வளர விடமாட்டார்கள். அரசியல் பொருளாதார ஆதாயம். இவ்வளவு மலிவு விலையில் வோட்டுகளும், வேலையாட்களும் எப்படிக் கிடைப்பார்கள்?
இந்திய இருவுள் வாயில் (Railway) அலுவல் மற்றும் வியாபாரத்துக்கும், மறுவழிப் பயணங்களுக்கும் (return journeys) சிற்றூர் பயணிகளுக்கும் பயன்படுமாறு மாறவேண்டும் என்று மானகைத் துறை (management field) துப்புகள் தருகிறார்கள் கோவைக்காரங்க…
ஊர்களெல்லாம் பேருந்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுவிட்டதால் மக்களுக்கு ரயில் நிலையம் ‘தொலைவில்’ என்றாகிவிட்டது. விளைவு, கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன. கோவை-பொள்ளாச்சிக்கு இடையே மின்மயமாக்கப்பட்ட இருவழி அகலப்பாதை இருந்து, குறைந்தது அரைமணி நேரத்திற்கொருமுறையாவது வண்டிகள் இயக்கப்பட்டால் எப்படியிருக்கும்!
இந்த மாதிரி வடக்கில் செய்து இருவுள் வாயில் லாபம் ஈட்டிய செய்தியை தேசிகன் பகிர்கிறார்.
ஒரு சின்ன பிளாட்பாரம், நான்கு பென்ச்கள், குடிக்க ஒரு தண்ணீர் குழாய் என்று 8 லட்சம் ரூபாய் செலவில் ஒரு ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள். பின்னர் ரயில்வே அதிகாரிகள் அதை ஸ்டேஷனாக ஏற்றுக்கொண்டு அதன் வழியாக போகும் ரயில்களை ஒரு நிமிடம் நிறுத்த சம்மதித்தனர். இந்த ஸ்டேஷன் கட்டிய ஒரு வருடத்தில் 12,918 பயணிகள் ரயில் ஏறி இறங்கியிருக்கிறார்கள். ரயில்வேக்கு இதனால் கிடைத்த வருவாய் 1.5 லட்சம் ரூபாய்!
(தமிழாக்க வார்த்தைகள்: இராமகி)
தமிழ்நிதி பாரதி வழியாக..
சார்ல்ஸ் வீலன் எழுதிய கட்டுரை…
“So far, India has attracted mainstream attention mostly as the place where the guy booking your airline ticket — or transcribing your medical records or even preparing your taxes — happens to be sitting. That’s true enough. But India is far more than a telemarketing curiosity, and “outsourcing” is only a tiny piece of the economic transformation going on there”