Web Links - Ravi Srinivas
தமிழகத் தேர்தல் அரங்கு, இட ஒதுக்கீடு, மேதா பட்கர், உலகமயமாதல், அமெரிக்காவும், குடியேற்றமும், இணையத்தில் சுதந்திரமும், கட்டுப்பாடும் என்று படித்த உரல்களைத் தட்டலாம்.
தமிழகத் தேர்தல் அரங்கு, இட ஒதுக்கீடு, மேதா பட்கர், உலகமயமாதல், அமெரிக்காவும், குடியேற்றமும், இணையத்தில் சுதந்திரமும், கட்டுப்பாடும் என்று படித்த உரல்களைத் தட்டலாம்.
செய்திகளின் தலைப்புகள், வாசகர்களை, ஈர்க்கக் கூடியதாக இருக்கும் படி செய்தியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இப்போது கூகுள் தேடியந்திரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்கிறார்..
….news organizations large and small have begun experimenting with tweaking their Web sites for better search engine results. But software bots are not your ordinary readers: They are blazingly fast yet numbingly literal-minded. There are no algorithms for wit, irony, humor or stylish writing. The software is a logical, sequential, left-brain reader, while humans are often right brain…
தமிழ் இணையத்துக்கு வந்தது எப்படி என்பது முதற் கொண்டு தற்போதைய வலைப்பதிவு வாழ்க்கை வரை, சுருக்கமாக, அழகாக விளக்கும் ஆசீப் மீரானின் இடுகை. ['நினைவு நதியில் ஒரு பயணம்' கவிதத்தனமா தலைப்பு வெக்கற அளவுக்கு ஸ்கோப் இருக்கிற மேட்டரை வேஸ்ட் பண்ணிட்டீங்களே அண்ணாச்சீ ]
காசி, ரெயின்போ பண்பலை அலைவரிசையில், தமிழ் இணையம் குறித்து, ஒரு தொடர் நிகழ்ச்சி அளித்து வருகிறார். இதைக் குறித்து காசி..
தமிழ் இணையத்தில், குறிப்பாக வலைப்பதிவுகள் மட்டத்தில் நிகழ்ந்துவரும் முன்னேற்றங்கள் பற்றி இணையத்துக்கு வெளியே இயங்கும் ஊடகங்களில் அதிகம் தெரிவதில்லை. இயன்ற அளவு அத்தகைய ஊடங்ககளில் இந்த செய்திகள் வரச்செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அவற்றில் ஒன்று வானொலி மூலம் சுருக்கமாக சில செய்திகளை சொல்லுவது. அகில இந்திய வானொலியின் கோவை நிலைய இயக்குநர் கலைமாமணி முனைவர் சேயோன் அவர்களுடன் இதுபற்றி அளவளாவியபோது இதற்கு ஒரு வழிகிடைத்தது. அதன்மூலம் வாராவாரம் கோவையிலிருந்து ஒலிபரப்பாகும் ரெயின்போ எஃப்.எம். மூலமாக ஒரு உரையாடல் வடிவத்தில் சில தகவல்களை பரிமாறிக்கொள்ள இருக்கிறோம்.
என்கிறார்..
அவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்பட்ட கோப்பு, புதிதாக ஆரம்பிக்கப்ட அவரது வலைப்பதிவில் கிடைக்கும்.
கேளுங்கள்.
[ இது ஒரு பழைய பதிவு ]
வலைப்பதிவுகள் துவக்க காலத்தில், வெகுசன ஊடகங்களுக்கும், தனிப்பட்டவர்களின் வலைப்பதிவுகளுக்குமான வேறுபாட்டை துல்லியமாக விவரித்து பத்ரி எழுதிய பதிவு. இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், இதிலே சொல்லப்பட்ட கருத்துக்கள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
podcast ஐ எத்தனை பேர், எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்று Forrester நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Charlene இன் வலைப்பதிவில் இருந்து சில துளிகள்..
Our survey showed that only 1% of online households in North America regularly download and listen to podcasts. And when you include all of the people who are just interested or have used podcasts, they strongly favor listening to existing content like Internet radio or broadcast radio, not necessarily new content. (And for newspapers thinking about podcasting, putting print stories into audio format just ranked ahead of original content from bloggers) I think this has something to do with 1) original content just isn’t as well known; and 2) existing content benefits from users that simply want to time shift it. (Shameless plug: there’s lots of other demographic and measurement data about podcasting in the brief).
அய்யோ… நான் ஒண்ணும் சொல்லலை… இவர் சொல்றாருங்க.. என்னன்னு கொஞ்சம் விசாரிங்க..
மிடி, ட்ராக், என்றெல்லாம் விளக்குவதற்கு நடுவில் பிபிஓ-க்களின் பிரதாபங்களை பரிகசிக்கும் படங்களைப் பார்க்க சொல்கிறார் ஸ்ரீகாந்த் தேவராஜன். (பரிந்துரை: ஸ்ரீகாந்த் மீனாக்ஷி)
எதிர்த்த வீட்டு மாமி பேப்பர் கடன் கேட்பாரே? பக்கத்து வீட்டுக்காரர் காபிபொடிக்கு நிற்கிறாரா? உபயோகமில்லாத பண்டங்களையும் தாற்காலிகமாக உபயோகிக்காததையும் பரிமாற அழைக்கும் வலையகம் குறித்த அறிமுகம் + விமர்சனம்.
மும்பை, சென்னையைத் தொடர்ந்து பெங்களூரும் மெட்ரோபதிகிறது. (புதிய உறுப்பினர்களையும் வரவேற்கிறது.)
இந்திய மொழி வலைப்பதிவுகளுக்கு என, bhasha india, விருதுகள் வழங்குகிறது… நீங்கள் விரும்பி வாசிக்கும் வலைப்பதிவுகளை nominate செய்யலாம். ஓட்டு போடலாம்..
மேலதிக விவரங்கள், பத்ரி வழியாக
மதுரை திட்டம் பற்றி தெரியுமில்லையா? project gutenberg போல, தமிழில் நடக்கும் ஒரு மகா, மெகா திட்டம்.. இந்த திட்டத்தை விரிவு படுத்த , நவீன இலக்கியங்களை உள்ளிட, தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு தேவை…
வெங்கட் விடுக்கும் அழைப்பு இதோ…