How To Write a Review - Sonia Faleiro
மீன், கோழி என்று வாங்க செல்வதற்கு நடுவில் விமர்சனங்கள் குறித்த வாசக அனுபவம் சமைக்கிறார்.
மீன், கோழி என்று வாங்க செல்வதற்கு நடுவில் விமர்சனங்கள் குறித்த வாசக அனுபவம் சமைக்கிறார்.
நீங்க 'ஈ' ஓட்டுபவரா? கொசு அடிப்பவரா? முதலாவதற்கு ஆம் என்று சொன்னால் அமெரிக்கப் பொருளாதாரம் உங்களை வாழ்த்தும்.
வேலியே பயிரை மேய்கிறது; கிருமிநாசினியே வெருவி கொடுக்கிறது; காசாளுநர்களே ரூபாய் நோட்டின் மீது கிறுக்குகிறார்கள்.
வைகோவை கலைஞரே போர்வாள் என்று சொல்லிவிட்டாரே என்று ஆதங்கப்பட்டவர் அந்த வாள் துருப்பிடித்து முனை மழுங்கி வரும்போது மறுபடியும் அறிவாலயத்தார் கூராக்கி அனுப்புகிறார் என்று குற்றம் சாட்டினார்.
மடிப்பாக்கம் என்று சொல்லிக் கொண்டாலும் மயிலாப்பூர் மீட்டிங்குக்கும் சென்று வருகிறார். திமுக பிரச்சார பொதுக்கூட்டம் குறித்த நேரடி ரிப்போர்ட்.
1987 மே மனஓசை இதழில் வெளிவந்த 'என்னங்க நாடு எல்லாமே பிராடு' என்னும் அறிவுமதியின் கவிதையை புதுச்சேரி இரா.சுகுமாரன் 'தேர்தல் 2006' உடன் ஒப்பிடுகிறார்.
அமெரிக்காவில் வாழும் தெற்காசியரின் கலாச்சாரக் குழப்பத்திற்கு பெற்றோர்கள் காரணமா என்று அலசுகிறது 'டொரண்டோ தமிழ்'.
திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி 'மனப்பத்தாயம்', 'பஞ்சாரம்' 'தெப்பக்கட்டை' கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து ஆனந்த விகடனில் தொடராக வந்த 'தெருவாசகம்' வெளியிட்டுள்ளார். புத்தக விமர்சனம்.
ஜேர்மன் "பூவரசு" இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற செழியனின் 'வளைந்து போன வீரவாள்'.
ஆண்டாள் பிரியதர்ஷினியின் 'மன்மத எந்திரம்', 'காதல் நாற்பது' எனும் இரு கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு செல்கிறார் மதுமிதா. (தொடரும் போட்டுவிட்டு விடையும் தராமல் அரசியலுக்குத் தாவிட்டாங்க.)
ஹண்டே என்று சுகாதாரநலத்துறை அமைச்சர் இருந்ததுதான் அறிந்திருந்தேன். ஹூண்டாய் என்றாலும் ஹண்டே என்றாலும் ஒன்றுதான் போல!
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல் : ஒலிக்கோப்பு ஒன்று | இரண்டு.
கேட்க முடியாதவர்களுக்கும் படிக்க விரும்புபவர்களுக்கும் பிபி பாலாஜியின் வலைப்பதிவில் காணக் கிடைக்கிறது. 1 | 2
இந்திய அறிவியற் கூடம் தமிழ்ப் பேரவை 'மின்னல்' மாத இதழின் அக்டோபர் 1985ல் அருள்செல்வன் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறார் மு. சுந்தரமூர்த்தி.
எல்லோர் வாழ்க்கையிலும் இப்படிப் பட்ட கதை ஒன்று இருந்தே ஆகும் போலிருக்கிறது. ஒரு விக்ரமன் படத்துக்கான கதையை ஒரு பக்கத்தில், கொங்குத் தமிழில் அழகாக எழுதியிருக்கிறார்..[ 'நீ இதைச் செய்யலாமான்னு?" சட்டையைப் பிடிச்சு உலுக்கினப்பவே உறைச்சிருக்கணுமே ராசா.. மிஸ் பண்ணிட்டீரே
]
அருமை…